“மனிதாபிமானமே இல்லாதவர் ஜோசப் விஜய்... வழக்குப் பதிய முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடம் சொன்னேன்” – ரகுபதி
"கரூர் சம்பவத்தின் போது விஜய் மீது வழக்குப் பதிய சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் தான் தெரிவித்தேன்." என முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
கரூர் சம்பவம் குறித்து மனிதாபிமான அடிப்படையில் முதலமைச்சர் விஜய் மீது வழக்கு தொடர வேண்டாம் என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார் என முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “கரூர் சம்பவத்தின் போது விஜய் மீது வழக்குப் பதிய சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் தான் தெரிவித்தேன்.




