சித்திரைச்சாவடி தடுப்பணையை துார்வார... இதுவே சரியான நேரம்!:பாதாளத்துக்கு செல்கிறது நிலத்தடி நீர்மட்டம்
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், வறண்டு கிடக்கும் சித்திரைச்சாவடி தடுப்பணையை தூர்வாரி, நீரை சேமிக்க வேண்டும்.
கோவையின் ஜீவநதியான நொய்யல் ஆறு, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உருவாகி, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக கரூரில் காவிரியுடன் கலக்கிறது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விவசாயம் பிரதான தொழில். நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையாக, சித்திரைச்சாவடி தடுப்பணை உள்ளது.இந்த தடுப்பணையில் இருந்து, நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்காலான கீழ்ச்சித்திரைச்சாவடி வாய்க்கால் துவங்கி, 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.


