மாடு திருட வந்த தந்தை, மகன் கைது
கடம்பத்துார்: சிற்றம்பாக்கம் பகுதியில் மாடு திருட வந்த தந்தை – மகனை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 50; விவசாயி. இவர், வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை 4:00 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மாடுகளை திருட முயன்றனர்.
அப்போது, வீட்டின் வெளியே வந்த ஏழுமலை கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, தப்பியோட முயன்ற இருவரையும் பிடித்து, கடம்பத்துார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
