ரயில் மோதி முதியவர் பலி
அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த ஆர்.எஸ்.மாத்துாரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 81; இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள ரயில் பாதையைக் கடந்தார். அப்போது சென்னை நோக்கிச் சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார். விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார், முதுநகர் அடுத்த சுத்துக்குளம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் தனதுவ வீட்டில் மது பாட்டில் பதுக்கி விற்ற அண்ணாதுரை, 55; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த உத்திரசோலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் மோகன்ராஜ், 24; கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் நிறுத்தியிருந்த அவர் பைக் கடந்த மாதம் காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில், அரியலுார், கருடதெருவைச் சேர்ந்த செந்தில் பிரபாகரன் மகன் கிேஷார் 20; பைக் திருடியது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

