அணையில் பிளாஸ்டிக் கழிவு தவிர்க்க நடவடிக்கை தேவை
உடுமலை: அமராவதி அணை மற்றும் பூங்காவில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக அகற்றி, மாசுபாட்டை குறைக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 55 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல்வேறு நகரங்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான கிராமங்களுக்கு அமராவதி அணையிலிருந்து, ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரே குடிநீர் ஆதாரமாக உள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அணைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணியர் வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் அணைப்பகுதியில் பலவகையான பிளாஸ்டிக் கழிவுகளை வீசிச் செல்கின்றனர்.

