போலீசார் நலனை பாதுகாக்க காவல் குடும்பம் திட்டம்
சென்னை: போலீசார் குடும்பத்தினரின் நலனை பாதுகாக்க, ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் மனைவியர் பங்கேற்புடன், 'காவல் குடும்பம்' என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து, காவல் துறை அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
போலீஸ் அதிகாரிகளின் மனைவியர் பங்கேற்புடன், 'காவல் குடும்பம்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதில், கூடுதல் டி.ஜி.பி.,க்கள், சென்னை, ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர்கள், கூடுதல் கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.,க்கள் ஆகியோரின் மனைவியர் உறுப்பினர்களாக இருப்பர்.

