மத்திய அரசின் நிதி வீணடிப்பால் அரசு பள்ளி மாணவர்களின் கணினி கல்வி பாதிப்பு
ராமநாதபுரம்: ''மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் கணினி அறிவியல் ஆய்வக நிதி, கணினி பயிற்றுனர் பணிக்கான நிதி வீணடிக்கப்படுவதால் அரசு பள்ளிமாணவர்களின் கணினி கல்வி பாதிக்கப்படுகிறது,'' என, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு பி.எட்.,கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில பொதுச்செயலாளர் குமரேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:மத்திய அரசின் சமக்ரசிக்ஷா ஐ.சி.டி., திட்டத்தின் நோக்கம் அரசுப்பள்ளிகளில்கணினி ஆய்வகங்களை உருவாக்குவதும், மாணவர்களுக்கு கணினிஅறிவியல் கல்வியை வழங்குவதும் ஆகும். இதற்காக வழங்கப்படும் நிதியும்,மனிதவளமும் மாணவர்களின் கல்வி பயன்பாட்டை சென்றடைய வேண்டும்.
ஆனால் 2024 லிருந்து மாணவர்களின் கல்விக்காகபயன்படுத்தப்பட வேண்டிய நிதி, நிர்வாகப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

