வாடிப்பட்டியில் சார்பு நீதிமன்றம் எப்போது எதிர்பார்த்து ஏமாறும் மக்கள்
சோழவந்தான்: ''வாடிப்பட்டியில் சார்பு நீதிமன்றத்தை விரைந்து அமைக்க வேண்டும்'' என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இங்கு மயானம் அருகே 18 ஆண்டுகளுக்கு முன் உரிமையியல், குற்றவியல் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் அமைக்கப்பட்டது. வாடகை கட்டடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் தாலுகா அலுவலகம் அருகே ரூ. பல கோடி மதிப்பீட்டில் கட்டிய புதிய கட்டடத்தில் தற்போது இயங்குகிறது.
இதில் 3 ஆண்டுகள் தண்டனை வரம்பிலான கிரிமினல் வழக்குகளையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள சொத்துகளுக்கான சிவில் வழக்குகளையும் மட்டுமே விசாரிக்கும் நிலை உள்ளது. இதர வழக்குகளுக்கு மதுரை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல வேண்டியுள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.


