இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை: 6 விமான நிலையங்கள் மூடல்; 300 விமான சேவைகள் ரத்து
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் அனாக் கிரகடாவ் எரிமலை வெடித்து சிதறியதால் 6 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன. 300க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் புகழ்பெற்ற அனாக் கிரகடாவ் எரிமலை உள்ளது. இந்த எரிமலை திடீரென இன்று (செப்.6) வெடித்துச் சிதறியது. இதனால் வானத்தில் ராட்சத சாம்பல் மேகங்கள் உருவாக, விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட 170 விமான சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகமானதால் பயணிகள் இடையே குழப்பம் ஏற்பட்டது.







