மக்காச்சோளம், நிலக்கடலை பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்: விவசாயிகளுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அழைப்பு!
மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை பயிா்களுக்கு வரும் 16-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிா் இழப்பில் இருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் 2026-2027 ஆம் ஆண்டில் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது நிலவும் எல் நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
குறுவை மற்றும் மானாவாரி பயிா்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 2026-ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை பயிா்களுக்கு பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
