ஆனைமலையில் குறுவை சாகுபடிகருத்தரங்கு மற்றும் கண்காட்சி: ஆட்சியா் பங்கேற்பு
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில்அங்கக வேளாண்மை மற்றும் குறுவை சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா்.
ஆனைமலையில் குறுவை சாகுபடி கருத்தரங்கு மற்றும் வேளாண் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குநா் சோமசுந்தரம் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது, ‘தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

