வடமாநில தொழிலாளி வெட்டி கொலை; மூவர் கைது
குன்றத்துார்: சோமங்கலம் அருகே 25 வயது வடமாநில தொழிலாளியை, கத்தியால் குத்தி கொலை செய்த மூவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் குல்ஷன்குமார், 25. குன்றத்துார் அடுத்த காட்டரம்பாக்கத்தில், நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி, இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில், தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
குல்ஷன்குமாருக்கும், இவருடன் பணியாற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த டோபன் டோலி, 20, என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
