எல் நினோ, வெயிலின் தாக்கம் பற்றி அலசுமா மாவட்ட பசுமைக் குழு புத்துயிர் பெறுமா
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முடங்கி கிடக்கும் பசுமை குழுவை, ஆட்சி மாறி, புதிய கலெக்டர் பொறுப்பேற்க உள்ளதால் புதிய உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகளை நியமித்து, தற்போது நிலவி வரும் எல்நினோ, கடும் வெயில் குறித்து ஆலோசனைகளை நடத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முந்தைய தி.மு.க., அரசு கலெக்டரை தலைவராக கொண்டு பசுமை குழுவை உருவாக்கியது. டி.ஆர்.ஓ., வேளாண் இணை இயக்குனர், தோட்டக்கலை துணை இயக்குனர், வனத்துறை அலுவலர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர், தன்னார்வ அமைப்பினர் ஆகியோரை கொண்டு செயல்படும்.
தற்போது ஆட்சி மாறிவிட்டது. கலெக்டரும் புதிதாக பொறுப்பேற்க உள்ள நிலையில், மாவட்ட பசுமைக் குழுவை புத்துயிர் பெற செய்வது அவசியமாகிறது. புதிய பிரச்னையாக காலநிலை மாற்றமும் தலையெடுத்துள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை அமைச்சகத்தின் அலகுகள் மாவட்டந்தோறும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அவை முழுவதுமாக அலுவலக பயன்பாட்டிற்கு வரவில்லை.
