அருள்நிதியின் 'டிமாண்டி காலனி 3' திரைப்படத்தை வெளியிட தடை - நீதிமன்றம் உத்தரவு!
அருள்நிதியின் 'டிமாண்டி காலனி 3' படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒப்பந்த விதிகளை மீறியதால், ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் வழக்கு தொடர்ந்தது.
நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவான 'டிமாண்டி காலனி 3' திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்துவும், 'ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் ஏ. விஜயா சுப்பிரமணியனும் இணைந்து கடந்த 2023 ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்திற்காக ஒப்பந்தம் செய்திருந்தனர்.



