வேகமாக பரவுது! மூட்டு வலி, தலை வலியுடன் கூடிய குளிர் காய்ச்சல்: ஒரு வாரத்திற்குமேல் முடக்கிவிடுவதால் மக்கள் அச்சம் அலட்சியம் வேண்டாம் எனவும் டாக்டர்கள் அறிவுரை
- நமது நிருபர் - சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில், வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தலைவலி,
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில், வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தலைவலி, மூட்டுவலி, தொண்டை வலி என, ஒருவாரத்திற்கு மேல் பாதிப்பு நீடிப்பதால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. காய்ச்சல் வந்தால் கவனமாக இருக்க வேண்டும்; அலட்சியம் வேண்டாம் என, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுதும் பகலில் கோடை காலத்தை மிஞ்சும் வகையில் கடுமையான வெயில் மற்றும் இரவு நேரங்களில் மழைப் பொழிவு இருந்து வருகிறது.
இந்த காலநிலை மாற்றத்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, மனிதர்களுக்கு பல்வேறு வகையான உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.



