துார்வாரும் பணிக்கான டெண்டரில் முறைகேடு நடந்ததாக புகார்
சென்னை: பருவ மழைக்கு முந்தைய துார்வாரும் பணிக்கான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக, நீர்வளத் துறையில் சலசலப்பு எழுந்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்கள், வடகிழக்கு பருவ மழையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. எனவே, பருவ மழை துவங்குவதற்கு முன்பாக, இம்மாவட்டங்களில் உள்ள அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பகிங்ஹாம் கால்வாய், வெள்ளாறு உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு, இப்பணிகளை மேற்கொள்ள, 42 கோடி ரூபாயை, நீர்வளத் துறைக்கு அரசு வழங்கியுள்ளது. இந்த நிதியில், ஐந்து மாவட்டங்களில், 202 இடங்களில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.




