பெரியாா் பல்கலை. கல்லூரிகள் இடையே ஜூடோ போட்டி
சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான ஜூடோ போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி உடற்கல்வி இயக்குநா் சிவகுமாா் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் காந்திமதி கலந்துகொண்டு, போட்டிகளை தொடங்கிவைத்தாா்.
இதில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 200க்கும் அதிகமான வீரா்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனா். எடை அடிப்படையில் ஆண்கள், பெண்கள் தலா 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.


