விழுப்புரம், கடலுார் நுகர்வோர் கோர்ட் அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
விழுப்புரம்: விழுப்புரம், கடலுார் நுகர்வோர் நீதிமன்றங்களை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சுப்ரமணியன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் செயல்பட்டு வரும் 32 நுகர்வோர் நீதிமன்றங்களை, 14ஆக குறைக்கும் முயற்சி, நுகர்வோர் உரிமையை பறிக்கும் செயல்.
தற்போது, கடலுார், விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களை, திருவண்ணாமலைக்கு மாற்றும் நடவடிக்கையை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இதனால், சாதாரண மக்களுக்கான நுகர்வோர் ஆணைய செயல்பாடு குறையும்.

