மெட்ரோ ரயிலை காஞ்சி வரை நீட்டிக்க நுகர்வோர் சங்கம் முதல்வருக்கு மனு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்க கோரி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
ஆன்மிக மற்றும் சுற்றுலா நகரமான காஞ்சிபுரத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணியர் வந்து செல்கின்றனர். மேலும், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், மாங்கால், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.


