டெல்லி முதல் உலக அரசியல் வரை... ‘பிரிக்ஸ்’ போடும் புதிய கணக்கு!
மேற்காசியப் போர், எண்ணெய் விலை உயர்வு, டாலரின் ஆதிக்கம் உட்பட பல நெருக்கடிகளில் உலகம் சிக்கியிருக்கிறது. சவால்கள் மிகுந்த இந்தச் சூழலில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற டெல்லி ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
உலகின் எதிர்காலப் பொருளாதார சக்திகள் குறித்து பிரிட்டனின் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல், 2001-ம் ஆண்டு எழுதிய ஆய்வுக் கட்டுரையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளின் முதலெழுத்துகளை இணைத்து ‘BRIC’ என்ற சொல்லை உருவாக்கினார். இந்த நான்கு நாடுகளும், 2050-ம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உருவெடுக்கக்கூடும் என்பது அவரது கணிப்பாக இருந்தது. ஆனால், அவர் உருவாக்கிய ‘பிரிக்ஸ்’ என்ற சொல் அரசியல் வடிவம் பெறுவதற்கு நீண்டகாலம் ஆகவில்லை.
2006-ல் BRIC நாடுகளுக்கு இடையே முறையான ஒத்துழைப்பு தொடங்கியது. அதில், 2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா இணைந்ததால், `பிரிக்’ என்பது `பிரிக்ஸ்’ ஆனது.




