2013 நக்சல் தாக்குதல் பா.ஜ., ராஜீவ் சந்திரசேகர் – காங்., சிதம்பரம் இடையே காரசார வார்த்தை போர்
திருவனந்தபுரம், செப். 10– சத்தீஸ்கரில் கடந்த 2013ல் நடந்த நக்சல் தாக்குதல் விவகாரம் தொடர்பாக கேரள பா.ஜ., தலைவர்
சத்தீஸ்கரில் கடந்த 2013ல் நடந்த நக்சல் தாக்குதல் விவகாரம் தொடர்பாக கேரள பா.ஜ., தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் காங்., மூத்த தலைவர் சிதம்பரத்துக்கு இடையே காரசார வார்த்தை போர் வெடித்துள்ளது.
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில், கடந்த 2013, மே 25 அன்று காங்கிரஸ் நிர்வாகிகள் சென்ற வாகனத்தை குறிவைத்து நக்சல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், அப்போதைய காங்கிரஸ் மாநில தலைவர் நந்தகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர்.
சமீபத்தில் இவ்வழக்கில் 10 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்து இருந்தது.


