முடக்கம்! -ஆளும்கட்சி அலட்சியம்!
தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திலுள்ள மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள், ஒன்றியங்கள், கிராம பஞ்சாயத்துகள் மக்கள் பிரதிநிதிகளால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கான பதவிக்காலம் இந்தாண்டு இறுதிவரை உள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி மாதம் ஒருமுறை மன்றக் கூட்டம் நடத்தவேண்டும். தவறும்பட்சத்தில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை கட்டாயம் கூடி மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் விவாதித்துச் செயல்படுத்தவேண்டும். த.வெ.க. ஆட்சியமைந்தபின் அதில் சிக்கலை உருவாக்கியுள்ளார்கள் ஆட்சியாளர்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஒன்றியக்குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவர் சேஷா வெங்கட் தலைமையில் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் கடிதம் அனுப்பப்பட்டு, கூட்டத் துக்கு வருகை தந்திருந்தனர். மன்ற அரங்கில் சேர்மன், உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். பி.டி.ஓ.க்கள், பொறியாளர் உட்பட அதிகாரிகள் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை. இதனால் கோபமான சேர்மனும், கவுன்சிலர்களும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து ஒன்றியக்குழு பெருந்தலைவர் சேஷா வெங்கட் கூறும்போது, “"பி.டி.ஓ., டெபுடி பி.டி.ஓ, பொறியாளர் உட்பட அதிகாரிகள் யாரும் மன்றக் கூட்டத்துக்கு வரவில்லை. ஏன் வரவில்லை என தகவலும் தெரிவிக்கவில்லை. கூட்டத்துக்கு வருகைதந்தோம் என எங்களிடம் கையெழுத்து மட்டும் வாங்கினார்கள் அலுவலக ஊழியர்கள். இது எப்படி சரி? ஆட்சி மாறிவிட்டது என்பதற்காக நாங்கள் மக்கள் பிரதிநிதி யில்லை என்பதாகிவிடாது. அரசு அதிகாரி களும் ஆட்சிக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வது ஏற்புடையதல்ல''’என்றார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





