மீண்டும் லாக்கப் சித்ரவதை! -உயிருக்குப் போராடும் இளைஞர்!
சேலம் அருகே, கொள்ளை வழக்கில் கைதான வாலிபரை, ஆசனவாயில் லத்தியை விட்டு தாக்கியதாலும், வயிற்றில் சரமாரியாக உதைத்ததாலும் பெருங்குடல் கிழிந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சித்தன் பட்டிகுட்டையைச் சேர்ந்தவர் பழனிவேல். விவசாயி. கடந்த ஜூலை 18-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் இவருடைய வீட்டிற்குள், ஹெல்மெட், முகமூடி யணிந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று புகுந்தது. கத்தி முனையில், அவர்கள் அணிந்திருந்த 11 பவுன் நகைகள், வீட்டிலிருந்த 1 லட்ச ரூபாய் ஆகியவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
இதே கும்பல், அடுத்த 10 நிமிடத்தில், பக்கத்து ஊரான செந்தாரப்பட்டி மண்மலை பாலக்காட்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன் வீட்டிற்குள் நுழைந்தது. அவரும், அவர் மனைவி, மகன் மட்டுமே இருந்தனர். அவர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த கும்பல், ஐந்தரை பவுன் நகைகள், 50,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பினர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
