தமிழக கோவில்களுக்கு அசாம் யானைகள் அனுமதி வழங்க வனத்துறைக்கு கெடு
சென்னை: 'திருவண்ணாமலை உட்பட நான்கு கோவில்களுக்கு, அசாமில் இருந்து யானைகள் கொண்டு வருவதற்கான அனுமதி வழங்குவது குறித்து, ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்' என, தமிழக வனத்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த சேவா டிரஸ்ட் அமைப்பு சார் பில் தாக்கல் செய்த மனு:
கோவில் கும்பாபிஷேகம், பிரமோற்சவம் உள்ளிட்ட விழாக்களின் போது, யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.





