வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. பி.எஸ்.எல் தொடர் குறித்து கடும் விமர்சனம்..
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக 2010 முதல் 2017 வரை பணியாற்றி 2 ஐபிஎல் கோப்பைகளை வெல்ல வாசிம் அக்ரம் உதவியாக இருந்தார்
இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்ஷியைப் பாராட்டியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
15 வயதே ஆன இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங் மூலம் சர்வதேச கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய தேசிய அணியில் அறிமுகமாகி, மிகக் குறைந்த வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.


