பால் கூட்டுறவு சங்க நிலத்தை போராடி தக்க வைத்த மக்கள்
வடமதுரை:வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிலம் தவறுதலாக இருவரது பெயரில் பதிவாகி இருந்ததை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து சங்க பெயரில் பட்டா வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு 1983ல் 50 சென்ட் இடம் விலைக்கு வாங்கி கட்டடம் கட்டி 1987ல் திறக்கப்பட்டது. சங்க கட்டடம் பழமையாகவே 2022ல் 100 நாள் வேலையுறுதி திட்டத்தில் ரூ.16.46 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இதற்கு மின்இணைப்பு பெற பட்டா நகல் பெற்ற போது 20 சென்ட் நிலம் குறைவாக இருந்ததும், அந்த நிலம் 2007ல் அதே பகுதி இருவர் பெயரில் முறைகேடாக பட்டாவாக பதிவாகி இருந்ததும் தெரிந்தது.