சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான கலந்தாய்வில் சரமாரி கேள்வி! பொதுமக்கள், விவசாயிகளுக்கு பாதிப்பு வரக்கூடாது
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன் பாளையம் அருகே கழிவுநீர் மற்றும் மனித கழிவு சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று சரமாரி கேள்வி எழுப்பினர்.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குடியிருப்புகள், நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளங்களில் வழிந்தோடி, முக்கிய நீர் ஆதாரங்களில் கலக்கிறது.
இதனால் கொசுக்கள் பெருகி, சுற்றுப்புற சூழல் பாதிக்கிறது. மேலும், கழிவுநீர் தேக்கத்தால், நிலத்தடி நீர் பாதிக்கிறது. பிரச்சனைக்கு தீர்வு காண நகராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

