த.வெ.க. எம்.எல்.ஏ. -தி.மு.க. சேர்மன் கூட்டு! -விருதுநகர் வில்லங்கம்!
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகரில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் தொடங்கவிருக்கும் நிலையில், அந்தத் திட்டத்துக்கான டெண்டர் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட 26 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4,508 மாணவர்களுக்கு சுமார் மூன்றரை ஆண்டுகளாக காலை உணவு வழங்கி வந்த உதயா மகளிர் சுயஉதவிக் குழு, இந்த முறை டெண்டரிலிருந்து நிராகரிக்கப்பட் டுள்ளது. அதற்குப் பதிலாக ஆதவன் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு டெண்டர் கிடைத்துள்ளது.
இது வெறும் டெண்டர் போட்டியில் ஏற்பட்ட மாற்றமா? அல்லது த.வெ.க.வுடன் தி.மு.க. மறைமுகமாக கைகோர்த்திருப்பதன் வெளிப்பாடா? என்ற கேள்வி தற்போது விருதுநகர் அரசியல் வட்டாரத்தில் சுழன்றடிக்கிறது.
உதயா மகளிர் குழு தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “"இதுவரை நாங்கள் மேற்கொண்ட ஒப்பந்தப் பணியை எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் செய்துவந்தோம். அதற்கான சான்றையும் நகராட்சி ஆணையரே வழங்கியுள்ளார். இந்த நிலையில், புதிய டெண்ட ரில் எங்கள் குழு நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊநஒ, டஎ தொடர்பான ஆவணங்கள் இல்லை என்பதே நிராகரிப்புக்கான காரணமாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட் டது. ஆனால், டெண்டர் நிபந்தனைகளில் குறிப்பிட்ட சில ஆவணங்களை பின்னர் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், டெண்டர் பரிசீலனை நடைமுறை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. டெண்டரில் பங்கேற்றவர்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கக்கூட போதிய அவகாசம் தரவில்லை அவசரமாகவே டெண்டர் முடிக்கப் பட்டுள்ளது. புதிய டெண்டரைப் பெற்றுள்ள ஆதவன் மகளிர் சுயஉதவிக் குழுவை, விருதுநகர் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் மாதவனின் சொந்தக்காரர்கள்தான் நடத்தி வருகிறார்கள். அந்தக் குழுவின் ஊநஒ, டஎ பதிவுகளில் நகர்மன்றத் தலைவர் மாதவன், அவரது மனைவி, சகோதரர் உள்ளிட்ட உறவினர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன''’என்றனர்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

