மாணவர்களே ரெடியா.? - ரிமோட் கார் ரேஸ் முதல் கிளே மாடலிங் வரை... நெல்லையில் 3 நாள் விழா
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் மற்றும் தனுஷிரி வென்ச்சர் இணைந்து நடத்தும் தேசிய பொறியாளர்கள் தின விழா 3 நாட்கள் நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் மற்றும் சென்னை தனுஷிரி வென்ச்சர் இணைந்து தேசிய பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. செப்டம்பர் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியை கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானியும், திட்ட இயக்குநருமான ஆபிரகாம் ஜேக்கப் தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து, தேசிய பொறியாளர்கள் தினத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.



