வழிப்பறி வழக்கில் 25 ஆண்டுகளாக தேடப்பட்டவா் கேரளத்தில் கைது
வழிப்பறி வழக்கில் சிக்காமல் கேரளத்தில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் அரவிந்தன் (60). கடந்த 2001- ஆம் ஆண்டு காரியாபட்டி பகுதியில் நிகழ்ந்த வழிப்பறி வழக்கில் காவல் துறையினா் இவரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், அரவிந்தன் கேரளத்தில் வசித்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் விக்னேஷ் உத்தரவின் பேரில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையில் தலைமைக் காவலா்கள் சங்கா், கணேஷ், நாகராஜ் ஆகியோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

