திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் 25 ஆண்டுகளுக்குப் பின் கைது
காரியாபட்டி, செப். 7- காரியாபட்டி பகுதியில் 2001ல் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில், அருப்புக்கோட்டை
காரியாபட்டி பகுதியில் 2001ல் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில், அருப்புக்கோட்டை கட்டங்குடியைச் சேர்ந்த அரவிந்தன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவான அரவிந்தன் கேரளாவில் வசிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., விக்னேஷ், காரியாபட்டி எஸ்:ஐ., வீரணன் தலைமையில் எஸ்.எஸ். ஐ., சரவணன், போலீசார்கள் சங்கர், நாகராஜ், கணேஷ் கொண்ட தனிப்படை கேரளா சென்றனர். கேரளா காசர்காடு பகுதியில் முகமது பிலால் என்ற பெயரில் வசித்து வந்த அரவிந்தனை கண்டுபிடித்து கைது செய்தனர். மதம் மாறி, பெயரை மாற்றி. 25 ஆண்டுகளாக தலைமுறைவாக இருந்த அவரை காரியாபட்டி போலீசார் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர் .