பிகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து!
தடம்புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள்.
பிகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், ஆரா சந்திப்பு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தில்லி செல்லும் சிக்கிம் மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாக மூத்த அதிகாரி தெரிவித்தார். அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.



