யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
மூணாறு: யானை தந்தத்தை விற்க முயன்ற இருவரை வனத்துறை புலானாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே யானை தந்தம் விற்க முயற்சி நடப்பதாக வனத்துறை புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி அடிமாலி அருகே இரும்புபாலம் பகுதியில் யானை தந்தத்தை விற்க தயார் நிலையில் இருந்த மச்சிபிளாவ் பகுதியை சேர்ந்த பிரிஜித் 19, சுனீஷ் 22, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 8 கிலோ எடை கொண்ட யானை தந்தம், அதனை கடத்தி வர பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


