உடலுறுப்பு பாதுகாப்பு மையம் துவக்க நடவடிக்கை என்ன உயர்நீதிமன்றம் கேள்வி
மதுரை: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில்உடலுறுப்புகளை பாதுகாக்கும் மையம் துவக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: தோல், எலும்பு, குருத்தெலும்பு, இதய வால்வுகள் உள்ளிட்ட பல்வேறு உயிரியல் திசுக்கள் மற்றும் உயிரியல் பொருட்களை பாதுகாக்கும் (பயோ மெட்டீரியல்) மையத்தை மதுரை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் அமைக்க வேண்டும். தோல் வங்கி, பயோமெட்டீரியல் மையத்தின் முக்கியத்துவம், பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வு விசாரித்தது.

