கிராபைட் ஊழியர்களுக்கு சலுகை ரத்து
சிவகங்கை: சிவகங்கை அருகே கோமாளிபட்டி கிராபைட் ஆலை ஊழியர்களுக்கான வாகனம், சோப்பு, தேங்காய் எண்ணெய், கேன்டீன் உள்ளிட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால் தவித்து வருகின்றனர்.
கோமாளிபட்டியில் தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் கீழ் 'கிராபைட்' ஆலை செயல்படுகிறது.
இங்கு மேலாளர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை 100 பேர் வரை பணிபுரிகின்றனர். இங்கு எடுக்கப்படும் கிராபைட் துகள் சுத்திகரிக்கப்பட்டு விமான உதிரி பாகங்கள், பென்சில், தங்க நகை உருக்கும் குடுவை போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.
