கஞ்சா கடத்திய கும்பலை விரட்டி பிடித்த போலீசார்
சேலம்: ஒடிஷாவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கும்பலை, சேலம் அருகே, சினிமா பாணியில் போலீசார் விரட்டி பிடித்தனர்.
சேலம் வழியே கருப்பு நிற காரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக, மாநகர போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல்குமாருக்கு, நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. அவர் உத்தரவுப்படி, மாநகர் முழுதும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இரவு, 7:00 மணிக்கு, ஆச்சாங்குட்டப்பட்டி சோதனைச்சாவடி வழியே வந்த, 'எண்டோவர்' காரை நிறுத்த முயன்ற போது, கார் நிற்காமல் சென்றது. போலீசார், அந்த காரை விரட்டினர்.


