மிசா சட்டம்.. நெருக்கடி நிலை குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை! அரசியல் பின்னணி விவரம்!
1960களின் இறுதி, 1970களின் தொடக்கத்தில் இந்திரா காந்தி எதிர்கொண்ட கட்சி உள்நெருக்கடி, சர்வதேச அழுத்தம், உள்நாட்டு போராட்டங்கள் அனைத்தும் சேர்ந்து 1975 அவசரநிலைக்கு வழிவகுத்தன. Maintenance of Internal Security Act எனும் மிசா சட்டம் மூலம் நீதிமன்றம், பிடியாணை இன்றி ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 1977 தேர்தலுக்குப் பின் ஜனதா அரசு மிசாவை ரத்து செய்தது.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசுபொருளான மிசா சட்டம் குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் அந்தச் சட்டத்தின் பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிசா சட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் நெருக்கடி நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்,. நெருக்கடி நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அந்த காலகட்டத்தின் சூழலைத் தெரிந்துகொள்ள வேண்டும். 1964-இல் நேருவின் மறைவு மற்றும் 1966- இல் சாஸ்திரியின் திடீர் மறைவு ஆகிய சூழல்களுக்கு இடையே இந்திரா காந்தி பிரதமராகப் பொறுப்பேற்கிறார் . இந்திரா காந்தியின் தனித்துவமான அரசியல் போக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி கட்சிக்குள் பணிப்போரை உருவாக்கியது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

