நாய்க்கு கறி போட்டதை தட்டிகேட்டதால் ஆத்திரம்: வாலிபரை கடித்தவருக்கு வலை
வியாசர்பாடி: நாய்க்கு, சமைக்காத கோழிக்கறி கால்களை போட்ட நபரை தட்டிக் கேட்ட, 48 வயது நபரை தொடையில் கடித்த, வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பூர், செய்யூர் பார்த்தசாரதி தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு, 48. இவர் செப்.7 இரவு 11:00 மணியளவில், வியாசர்பாடி பி.பி. சாலை 4வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தெரு நாய்களுக்கு, சமைக்காத கோழிக்கறி கால்களை உணவாக தந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த ரமேஷ்பாபு, ‛நாய்களுக்கு சமைக்காத கறிவகைகளை தர வேண்டாம்' என கூறியுள்ளார்.