பெருவெள்ளத்தால் பாதித்த நேபாளத்தில் மற்றொரு சோகம்... சமையல் எரிவாயு தட்டுப்பாடு!
பக்திபூர் என்ற இடத்தில் கள்ளச் சந்தையில் எரிவாயு சிலிண்டர் விற்ற இருவரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தலைநகர் காத்மாண்டுவில் மாணவர்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டின் பிரித்வி நெடுஞ்சாலையில் உள்ள கிரிஷ்ணபீர் என்ற இடத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக எரிவாயு ஏற்றிவரும் வாகனங்கள் காத்மாண்டுவிற்குள் நுழைய முடியவில்லை.


