மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக ஜெ.காமராஜ் பொறுப்பேற்பு
சென்னை,மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான்-நி
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் மண்டலத்திற்கான கூடுதல் தலைமை இயக்குநராக ஜெ. காமராஜ் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இம்மண்டலத்திற்கான கூடுதல் பத்திரிகை தலைமை பதிவாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.நெடிய அனுபவம் கொண்ட அதிகாரி இந்திய தகவல் பணியின் 2008-ம் ஆண்டு பிரிவு அதிகாரியான ஜெ. காமராஜ், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அனுபவம் மிக்கவர் ஆவார்.
2008–2010: இந்திய ரெயில்வே போக்குவரத்து பணியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.




