2வது அலுவல் மொழியாக துளுவுக்கு அங்கீகாரம்?: அமைச்சரவை கூட்டத்தில் நாளை ஆலோசனை
பெங்களூரு: கர்நாடகாவின் இரண்டாவது கூடுதல் அலுவல் மொழியாக துளுவுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மங்களூரில் நாளை நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில், கன்னடத்திற்கு அடுத்த படியாக, கடலோர மாவட்ட மக்களின் தாய்மொழியாகவும், பழமையான மொழிகளில் ஒன்றாகவும் துளு மொழி விளங்குகிறது.
கடலோர பகுதிகளான தட்சிண கன்னடா, உடுப்பி, மங்களூரு பகுதிகளில் துளு மொழியை பேசும் மக்கள் அதிகமாக இருக்கின்றனர். இதனால், இப்பகுதி துளு நாடு என அழைக்கப்படுகிறது.
துளு நாட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், தெய்வங்களை வழிபடுகின்றனர்.



