சிறுவனை நிர்வாணப்படுத்தி... மிளகாய்ப்பொடி தூவி... தூத்துக்குடி பள்ளியில் அரங்கேறிய கொடூரம்!
மிளகாய்ப்பொடியின் எரிச்சலைத் தாங்க முடியாமல் அவர் அலறியபோதுதான், வகுப்பாசிரியை வந்து விசாரித்ததில், 7-ம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே இந்தக் கொடுமை தொடர்ந்துவந்தது தெரியவந்திருக்கிறது.
பாடம் நடக்கவேண்டிய வகுப்பறை... ஒரு சிறுவனுக்கு சித்ரவதை அறையாக மாறியிருக்கிறது! கேலி, கிண்டலில் தொடங்கி பாலியல் துன்புறுத்தல், மிரட்டல், தாக்குதல் என ஓராண்டாக சக மாணவர்களே ஒரு சிறுவனைச் சித்ரவதை செய்திருக்கின்றனர். சக மாணவர்களால் துன்புறுத்தப்பட்ட சிறுவனின் அலறலைக் கேட்ட ஆசிரியர் தலையிட்ட பிறகே, இந்தக் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, 9 மாணவர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
கிண்டல், கேலி பெயரில் சித்ரவதை!


