சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: கருப்புக் கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்!
சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைப் பற்றி...
சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையை ஒட்டிய பகுதியில் புதிய தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நொச்சிக்காடு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

