சிப்காட் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
கடலுார், செப் 18–கடலுார் சிப்காட் தொழிற்பேட்டையை ஒட்டிய பகுதியில் புதிய தொழில் பூங்கா அமைக்க 450 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்காடு, தியாகவல்லி, குடிகாடு கிராம மக்கள் நேற்ற தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழில் பூங்காவுக்காக விவசாய நிலங்கள், குடியிருப்புகள் கையகப்படுத்தப்படுவதால் விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கெனவே சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் முன்பு மக்களின் கருத்துகளை கேட்டு, சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். விவசாய நிலங்களை பாதுகாக்க மாற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும். மேலும், நிலம் கையகப்படுத்த வழிவகுக்கும் அரசாணை 165-ஐ ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.