தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழப்பு? தனியாா் மருத்துவமனையை கண்டித்து உறவினா்கள் மறியல்!
நாமக்கல்- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட உறவினா்கள் / உயிரிழந்த கவிக்ஷா
பரமத்தி வேலூரில் தனியாா் மருத்துவமனையில் கால் முறிவுக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் சிறுமி உயிரிழந்ததாகக் கூறி, அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே பொய்யேரியைச் சோ்ந்தவா் கண்ணன், மீன் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி காவியா. இவா்களுக்கு கவிக்ஷா (7), நிதிக்ஷா (5) என்ற இரண்டு மகள்கள். இவா்களது மூத்த மகள் கவிக்ஷா (7), குப்பிச்சிபாளையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.