“கார் கதவை திறந்து ஒரு வார்த்தை கேட்டிருக்க கூடாதா சி.எம் சார்..?”
என் மகன் சாகும்போது சொன்ன கடைசி வார்த்தை என் காதைவிட்டு இன்னும் போகலைங்க... ‘அம்மா, என்னை ரொம்ப அடிச்சாங்கம்மா... `வலி தாங்க முடியலை.
“சி.எம் சார்... நில்லுங்க. நீதி வேண்டும்... ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கு நீதி வேண்டும்!” - செப்டம்பர் 3-ம் தேதி சென்னை தலைமைச் செயலக வாசலில் முதலமைச்சர் விஜய்யின் கான்வாய் நுழையவிருந்த நேரத்தில் இந்தக் கதறல் ஒலித்தது. அடுத்த சில விநாடிகளில், பாதுகாப்புத் தடுப்புகளைத் தாண்டி எட்டுப் பேர் முதலமைச்சரின் காரை நோக்கி ஓடினார்கள். கான்வாய் பிரேக் அடிக்கப்பட்டு நின்றது. பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் விரைந்து அவர்களைத் தடுத்து அப்புறப்படுத்தினர். எட்டுப் பேரும் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். “நீதி வேண்டும்” என்று கதறியவர்கள் யார்?
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த 26 வயது பட்டியல் சமூக இளைஞரான ஆகாஷ் டெலிசன், கடந்த மார்ச் மாதம் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஆறு காவலர்கள்மீது கொலை வழக்கு மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவுசெய்திருக்கிறது. ஆனாலும், குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரும் கைதுசெய்யப்படவில்லை என்று கூறி குடும்பத்தினர் போராடிவருகின்றனர். பலமுறை முயன்றும் முதலமைச்சரைச் சந்திக்க முடியாததால், ஆகாஷின் தாய் ஆனந்தி, தந்தை ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட எட்டுப் பேர் கோட்டை வாசலில் மனு கொடுக்க ஓடிவந்தனர்.
“கார் கதவைக்கூடத் திறக்கலையே...!”



