சுந்தராபுரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய எல்.இ.டி. ஸ்கிரீன் தியேட்டர்கள் துவக்கம்
சுந்தராபுரம்: கியூப் சினிமாவுடன் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டர் ஸ்கிரீனை கோவையில் அறிமுகம் செய்திருக்கிறது கற்பகம் தியேட்டர் குழுமம்.
ஆனால், இது காந்திபுரத்தில் இல்லை. சுந்தராபுரத்தில் பொள்ளாச்சி ரோடில் அமைந்துள்ளது கற்பகம் கிராண்ட்பிளக்ஸ். இதில் 5 தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் இரண்டு மிக மிக விசேஷமானவை, கோவைக்கு பெருமை சேர்ப்பவை.
எபிக் லக்சான், எபிக் லேசர் என்ற இரண்டு முன்னோடி தொழில்நுட்ப திரைகள் இவற்றில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் முதல் எபிக் லக்ஸ்ஆன் திரை அரங்கம் இது. இந்தியாவின் மிகப்பெரிய எல்.இ.டி. திரையும் இதுவே. 63 அடி உயரம், 63 அடி அகலம்.


