வீடுகளில் சோலார் பேனல் அமைக்க கடன் பெறுவதில் அலைக்கழிப்பு: அறிவிப்பு வரவில்லை என கைவிரிக்கும் வங்கிகள்
வத்தலக்குண்டு:வீடுகளில் சோலார் பேனல் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசின் மாற்று எரிசக்தி துறை முன்னெடுத்துள்ள நிலையில் அதற்கான கடனுதவி கேட்டு பொதுமக்கள் செல்லும் போது முறையான அறிவிப்பு வரவில்லை என வங்கிகள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மின்சார பயன்பாடு அதிகரித்து வருவதாலும், வெப்ப அலை நீடித்து ஆண்டுக்கு ஆண்டு மின் நுகர்வோர் அதிகரித்து வருவதாலும், மாற்று வழியை கண்டறிய வேண்டும் என பல ஆண்டுகளாகவே மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இயற்கையிலேயே கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பில் ஈடுபடுபவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
