ரூ.284 கோடியில் மாதவரத்தில் பணிமனை தயார்: மெட்ரோ ரயில்கள் நிறுத்த 24 பாதைகள் அமைப்பு
சென்னை: மாதவரத்தில், 284 கோடி ரூபாயில் புதிய மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. ரயில்களை நிறுத்துவதற்காக 24 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் - சிறுசேரி உட்பட மூன்று வழித்தடங்களில் 63,246 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 119 கி.மீ., துாரம், 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மெட்ரோ ரயில்களை பராமரித்து இயக்கும் வகையில், மாதவரம் மற்றும் பூந்தமல்லி ஆகிய இரண்டு இடங்களில், புதிய பணிமனைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.


