ராங்கால்! விஜய் சேதுபதியைக் கடிக்கும் விஜய் ரசிகர்கள்!
"ஹலோ தலைவரே, கடந்த 2024, ஜூன் 18, 19 தேதிகளில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தியதால் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதியினைச் சேர்ந்த 230 நபர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 69 நபர்கள் இறந்தனர். இது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை வந்திருக்கு.''”
"ஆமாப்பா, தி.மு.க.வுக்கு எதிரா அறிக்கைவிட பயன்படும்னு, கிடப்பிலிருந்த இந்த அறிக்கையை ஆர்வமா த.வெ.க. அரசு அவசர அவசரமாக சமீபத்தில் ரிலீஸ் செய்ததே.''”
"ஆமாம் தலைவரே, ‘கள்ளச்சாராய மரணங் களுக்கு வெறும் சட்ட விரோத வியாபாரிகள் மட்டுமல்லாமல், மது விலக்கு சட்டங்களை அமல்படுத்தத் தவறிய காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகளின் தீவிர அலட்சியமே காரணம்’ என்றது அறிக்கை. அதன்படி கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிரா பாளையம் வட்ட வி.ஏ.ஓ., ஆர்.ஐ.க்கள், தாசில்தார் கள், மதுவிலக்கு அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் என்றிருந்தது. டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வாலுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ள காவல் துறையிலுள்ள சில உயரதிகாரிகளோ, "அன்றைய நாளில் மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி.யாக இருந்தவர் இன்றைய டி.ஜி.பி.யான மகேஷ்குமார் அகர்வால். சம்பவம் நடந்த அன்றே அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்தது தி.மு.க. அரசு. கோகுல்தாஸ் அறிக்கையின்படி அவரும் விஷச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பான வரே. கடைநிலை பதவியிலிருக்கும் காவல்துறை, வருவாய்த்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகளை மட்டும் தண்டனைக்குள்ளாக்குவது ஏன்? இன்றைய டி.ஜி.பி.யும் தண்டனைக்குரியவர் தானே?'’என அறிக்கையினை காரணம் காட்டி குரல்கொடுத்துள்ளனர். அதனால் இன்னும் சில நாட்களில் டி.ஜி.பி. மாற்றம் நிச்சயம் என்கின்றது காவல்துறை வட்டாரம்.''”


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
